Wednesday, January 27, 2010

என் தந்தையின் 84வது பிறந்தநாள்

ஜனவரி 19ம் தேதி என் அன்புத் தந்தை டாக்டர் என் எஸ் சுந்தரம் அவர்களின் 84வது பிறந்தநாள் சிற்ப்பாக கொண்டாடப்பட்டது.

அதை ஒட்டி மும்பை மாத்துங்காவில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்ட்டது. இந்த நடவடிக்கை தொடரும்.

என்றும் அன்புடன்
டாக்டர் நடராஜன்

Wednesday, January 13, 2010

நடராஜனின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


அனைவரோடும் கொண்டாடுவோம் பொங்கலோ பொங்கல்

ஆதவனை வணங்கிடுவோம பொங்கலோ பொங்கல்



நம் உறவும்நட்பும் பலப்படுத்தும் பொங்கலோ பொங்கல்

நம் இதயத்தில்  பொங்கட்டும் நமது மனிதநேய்ம் பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்


அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


என்றம் உங்கள் அன்பில்


டாக்டர் எஸ். நடராஜன்
தலைவர் ஆதித்ய ஜோத் கண் மருத்துவமனை
மும்பை

Friday, January 8, 2010

Aditya Jyot OPD at Nagpada Police Hospital Inaugrated


On 7th Jan 2010, Aditya Jyot Eye OPD was inaugrated at the Nagpada Police hospital. In a glittering ceremony the newly made swank Eye OPD was inaugrated by the Shri RR Patil, Home Minister of Maharashtra.
The eye OPD is a great initiative taken by the Comisioner of Police, Mumbai, Mr. D Sivanandhan.

The Eye OPD promises to deliver high quality eyecare to the employees of Mumbai Police and their families and would be run by the young and dynamic Dr. Kanupriya Amol Mhatre.

Tuesday, January 5, 2010

பொன் ஆனந்த் இரங்கல் செய்தி, டாக்டர் எஸ்.நடராஜன்

எனது சித்தப்பாவின் மகனும், நெல்லை ஆர்எம்கேவி நிறுவனத்தின் தலைவருமான எனது அருமை சகோதரன் பொன் ஆனந்த் நெல்லையில் நேற்று திடீர் மரணம் அடைந்த தகவல் என்னை மிகவும் பாதித்தது. 42 வயதான மிகத் துடிதுடிப்பானவர் ஆனந்த். ஆர்எம்கேவி நிறுவனத்தின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கடுமையான உழைப்பாளி.

சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பொன் ஆனந்த்தின் மூத்த சகோதரர் ஒரு கார் விபத்தில் பலியானார். அந்த வடு மறையும் முன்பே காலன், பொன் ஆனந்த் அவர்களையும் எங்களிடம் இருந்து அழைத்துச்சென்றுவிட்டான். இந்த இரண்டு துயரங்களையும் பார்க்கும் போது, இறைவன் இருக்கிறானா என்றும், நல்ல இதயங்களை எல்லாம் எங்களிடம் இருந்து சீக்கிரம் அழைத்துசெல்வது ஏன் என கேட்கத்தோன்றுகிறது,

பொன் ஆனந்த்தின் இழப்பு எங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய இழப்பாகும், பொன் ஆனந்த்தினை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தார் மற்றும் ஆர்எம்கேவி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தினர்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது இழப்பினை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தார் அனைவருக்கும் அளிக்க இறைவனை வேண்டுகிறேன். 

பொன் ஆனந்த்தின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

டாக்டர் எஸ்.நடராஜன்

Monday, January 4, 2010

செய்த நன்றி அறிதல்............. வள்ளுவர் வாக்கு

செய்த நன்றி அறிதல்............. வள்ளுவர் வாக்கு

உதவி தேவைப்படும் காலம் அறிந்து செய்த உதவி சிறியதாகயிருந்தாலும் அந்த உதவிக்கு நிகர் எதுவுமேயில்லை. உலகத்தை விடவும் மிகவும் பெரியதாகும்.                                                                    (குறள் 102)

துன்பம் வந்த போது அதைத் துடைக்கத் தங்களுக்கு உதவியவர்களின் நட்பை நன்றியுள்ளோர் எழேழு தலைமுறைகளிலும் போற்றி மகிழ்வர்
                                                                                                   (குறள் 107)

2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

என் இனிய நண்பர்களே

உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன்

என்றும் உங்கள் அன்பில்
டாக்டர் எஸ். நடராஜன்
மும்பை

Sunday, January 3, 2010

Aditya Jyot wishes All of You A Very Happy New Year 2010

Aditya Jyot ushered the New Year with a Terrace Function organised on the evening of 31st December and bid adeu to the sun setting for the last time in 2009.

It was a fun event with Dumb Charades, Antakshari,  Songs, and Prize Distibution by the CMD followed by a Dance Party going into the late evening.